திருமந்திரம் எல்லாம்

திருமந்திரம் எல்லாம் சிவனருள்.

Tuesday, October 5, 2010

வேல் - மயில் - சேவல் விருத்தம்

வேல் - மயில் - சேவல் விருத்தம் 1 - 6


(அருணகிரி நாதர் அருளியது)




மயில் விருத்தம் - காப்பு
நாட்டை - ஆதி 2 களை

சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடக புய
சமர சிகாவல குமர ஷடானன சரவண குரவணியும்

கொந்தள பார கிராத புராதனி கொண்க எனப்பரவும்
கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்ஜரி மஞ்ஜரிதோய்

கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரத
கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்

எந்த மகோதர முஷிக வாகன சிந்துர பத்மமுக
சிவசுத கனபதி விக்ன வினாயக தெய்வ சகோதரனே

(கனபதி தெய்வ சகோதரனே வினாயக தெய்வ சகோதரனே)

---.


சேவல் விருத்தம் - காப்பு

கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல் கொண்டேழ் இசைமருள
குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி குமரன் இதம்பெறு பொற்

செந்தாமரை கடம் நந்தா வனமுள செந்தூர் எங்குமுளான்
திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு சேவல் தனைப்பாட

வந்தே சமர்ப்பொரு மிண்டாகிய கய மா முகனைக் கோறி
வன் கோடொன்றை ஒடித்துப் பாரதம் மா மேருவில் எழுதி

பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு பணி சிவ லிங்கம் அதை
பார்மிசை வைத்த வினாயகன் முக்கட் பரமன் துணையாமே

(முக்கட் பரமன் துணையாமே வினாயகன் பரமன் துணையாமே)

---.


வேல் விருத்தம் - 1
கம்சத்வனி - கண்ட சாபு

மகரம் அளறிடை புரள உரககண பணமவுலி
மதியும் இரவியும் அலையவே

வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
மகிழ்வு பெறும் அறு சிறையவான்

சிகரவரை மனை மறுகு தொறு ஞுளைய மகளிர் செழு
செனெல்களொடு தரளம் இடவே

ஜகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி
திடர் அடைய ஞுகரும் வடிவேல்

தகர மிருகமதம் என மணமருவு கடகலுழி
தரு கவுளும் உறு வள் எயிறுன்

தழை செவியும் ஞுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்
தரு துணைவன் அமரர் குயிலும்

குகரமலை எயினர்க்குல மடமயிலும் என இருவர்
குயமொடமர் புரியு முருகன்

குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்
குலையவிடு கொடிய வேலே

(குமரன்விடு கொடிய வேலே அறுமுகவன் விடு கொடிய வேலே)

---.


மயில் விருத்தம் - 1
கம்சட்வனி - கண்ட சாபு

சந்தான புஷப பரிமள கிண்கிணீ முக
சரண யுகளமிர்த்த ப்ரபா

சன்ற சேகர முஷிகாருட வெகுமோக
சத்ய ப்ரியாலிங்கன

சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரி
யம்பக வினாயகன் முதற்

சிவனைவலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு
சித்ர கலாப மயிலாம்

மந்தா கினிப் பிரபவ தரங்க விதரங்க
வன சரோதய கிர்த்திகா

வர புத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்

இந்த்ராணி மாங்கில்ய தந்து ரக்ஷாபரண
இகல்வேல் வினோதன் அருள்கூர்

இமையகிரி குமரிமகன் ஏரு நீலக்ரீவ
ரத்னக் கலாப மயிலே

(ரத்னக் கலாப மயிலே
ரத்னக் கலாப மயிலே)

---.


சேவல் விரித்தம் - 1
கம்சத்வனி கண்ட சாபு

உலகில் அனுதினமும் வரும் அடியவர்கள் இடரகல
உரிய பர கதி தெரியவே

உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள்மிடி கெட அருளியே

கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளைக்

கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து சிற
கைக்கொட்டி நின்றா டுமாம்

மலைகள் நெறு நெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்
மடிய அயில் கடவு முருகன்

மகுட வட கிரியலைய மலையுமுலை வனிதை குற
வரிசையின மகள் அவளுடன்

சிலைகுலிசன் மகள்மருவு புயன் இலகு சரவண
சிறுவன் அயன் வெருவ விரகிற்

சிரமிசையில் வெகு சினமொட் அடியுதவும் அறுமுகவன்
சேவற் திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே அறுமுகவன் சேவற்திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு

வெங்க் காள கண்டர் கை சூலமுன் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்

விபுதர் பதி குலிசமும் சூரன் குலங்க் கல்லி
வெல்லா எனக் கருதியே

சங்க்ராம நீஜயித்து அருளெனத் தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்ப

சயிலமொடு சூரனுடல் ஒருனொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்

கங்காளி சாமுண்டி வராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசன

கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
கெளரி காமாக்ஷி சைவ

சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வ

சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்க்கள் குலாந்தகன்
செம்பொட்ற்றிருக்கை வேலே

(முருகன் திருக்கை வேலே அறுமுகவன் திருக்கை வேலே)

---.


மயில் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு

சக்ரப் ப்ரசண்ட கிரி முட்டக் கிழிந்து வெளி
பட்டுக் க்ரவுஞ்ச சயிலன்

தகரப் பெருங்க் கனக சிகர சிலம்புமெழு
தனிவெற்பும் அம்புவியும் எண்

திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம் பெயரவே

சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்

பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுன் கவுரி
பத்மப் பதங்க் கமழ்தரும்

பகீரதி ஜடில யொகீசுரர்க் உரிய
பரம உபதேசம் அறிவி

கைக்கு செழும் சரவணத்திற் பிறந்த ஒரு
கந்த சுவாமி தணிகை

கல்லார கிரியுருக வரு கிரண மரகத
கலாபத்தில் இலகு மயிலே

(கலாபத்தில் இலகு மயிலே
மரகத கலாபத்தில் இலகு மயிலே)

---.


சேவல் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு

எரியனைய வியனவிரம் உளகழுது பல பிரம
ராக்ஷதர்கள் மிண்டுகள் செயும்

ஏவல் பசாசு நனி பேயிற் பசாசு கொலை
ஈனப் பசாசு களையும்

கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின் உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்

கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர்
கரத் தடர்த்துக் கொத்துமாம்

தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர் கிடு கிடென நடனம்

தண்டைகள் சிலம்புகள் கலிங்கலினென சிறிய
சரண அழகொடு புரியும் வேள்

திரிபுரம் அதெரிய நகைபுரியும் இறையவன் மறைகள்
தெரியும் அரன் உதவு குமரன்

திமிர தினகர முருக சரவண பவன் குகன்
சேவற் திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே குகன் சேவற் திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 3
சாரங்கா - கண்ட சாபு

வேதாள பூதமொடு காளி காளத்ரிகளும்
வெகுளுறு பசாச கணமும்

வென் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்கவந்தே

ஆதார கமடமுங்க் கணபண வியாளமும்
அடக்கிய தடக் கிரியெலாம்

அலைய நடமிடு நெடுன் தானவர் நிணத்தசை
அருந்தி புரந்த வைவேல்

தாதார் மலர்ச்சுவனி பழனிமலை சோலைமலை
தனிப்பரங்க் குன்றேரகம்

தணிகை செந்தூரிடைக் கழி ஆவினங்குடி
தடங்க் கடல் இலங்கை அதனிற்

போதார் பொழில் கதிர்க்காமத் தலத்தினை
புகழும் அவரவர் நாவினிற்

புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன்
புங்கவன் செங்கை வேலே

(கந்தங்குகன் செங்கை வேலே முருகன் குகன் செங்கை வேலே)

---.


மயில் விருத்தம் - 3
சாரங்கா - கண்டசாபு

ஆதார பாதளம் பெயர அடி பெயர மு
தண்ட முகடது பெயரவே

ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயர எறி
கவுட்கிரி சரம் பெயரவே

வேதாள தாளங்களுக் கிசைய ஆடுவார்
மிக்க ப்ரியப்பட விடா

விழிபவுரி கவுரி கண்ட் உளமகிழ விளையாடும்
விச்தார நிர்த்த மயிலாம்

மாதானு பங்கியெனு மாலது சகோதரி
மகீதரி கிராத குலிமா

மறைமுனி குமாரி சாரங்கனன் தனிவந்த
வள்ளிமணி ஞூபுர மலர்

பாதார விந்த சேகரனேய மலரும் உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்

படைனிருதர் கடகம் உடைபட நடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே

(பசுந்தோகை வாகை மயிலே
பச்சை பசுந்தோகை வாகை மயிலே)

---.


சேவல் விருத்தம் - 3
சார்ங்கா - கண்டசாபு

கரி முரட்டடி வலைக் கயிறெடுத் தெயிறு பற்
களை இறுக்கியு முறைத்து

கலகமிட்டி யமன் முற் கரமுறத் துடரும் அக்
காலத்தில் வேலு மயிலும்

குருபரக் குகனும் அப்பொழுதில் நட்புடன் வர
குரலொலித் அடியரிடை

குலத்தலறு முக்கிற்சினப் பேய்களைக் கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்

அரிய கொற்கையன் உடற்கருகும் வெப்பகையை உற்
பனமுறைத் தத மிகவுமே

அமணரைக் கழுவில் வைத்தவரு மெய்ப் பொடிதரித்து
அவனிமெய்த் திட அருளதார்

சிவபுரத் அவதரித் தவமுதத் தினமணி
சிவிகை பெற்றினிய தமிழை

சிவனயப் புற விரித்துரை செய் விற்பனன் நிகற்
சேவற்திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே
குருபரன் சேவற்திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி

அண்டர் உலகும் சுழல எண்திசைகளும் சுழல
அங்கியும் உடன் சுழலவே

அலைகடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல
அகில தலமும் சுழலவே

மண்டல நிறைந்த ரவி சதகோடி மதி உதிர
மாணப் பிறங்கி அணியும்

மணி ஒலியினிற் சகல தலமு மருள சிரம
வகை வகையினிற் சுழலும் வேல்

தண்டம் உடனுங்க் கொடிய பாசம் உடனுங்க் கரிய
சந்தம் உடனும் பிறைகள்போல்

தந்தமுட ஞும் தழலும் வெங்கண் உடனும் பகடு
தன்புறம் வரும் சமனை யான்

கண்டு குலையும் பொழுதில் அஞ்ஜலென மெஞ்சரண
கஞ்ஜம் உதவும் கருணைவேள்

கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே

(கந்தன் அடல் கொண்ட வேலே
முருகன் அடல் கொண்ட வேலே)

---.


மயில் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி

யுககோடி முடிவின் மண்டிய சண்ட மாருதம்
உதித்த தென்ற் அயன் அஞ்ஜவே

ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொற் குவடுறும்

வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந் இரு
விசும்பிற் பறக்க விரினீர்

வேலை சுவற சுரர் நடுக்கங்க் கொளச்சிறகை
வீசிப் பறக்கு மயிலாம்

நககோடி கொண்டவுணர் நெஞ்ஜம் பிளந்த நர
கேசரி முராரி திருமால்

நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
நந்தனன் முகுந்தன் மருகன்

முககோடி நதிகரன் குருகோடி அனவரதம்
முகிலுலவு நீலகிரிவாழ்

முருகனுமை குமரன் அறு முகன் நடவு விகடதட
முரிக் கலாப மயிலே

(விகடதட முரிக்கலாப மயிலே
சிறகை வீசிப் பறக்கு மயிலாம்)

---.


சேவல் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி

அச்சப் படக் குரல் முழக்கிப் பகட்டி அல
றிக் கொட்டமிட்ட் அமரிடும்

அற்பக் குறப் பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி
அறு குழைகளைக் கொத்தியே

பிச்சு சினத்த் உதறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே

பெற்றுச் சுடர் சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக் கொக்கரித்து வருமாம்

பொய் சித்திரப் பலவும் உட்கத் திரை ஜலதி
பொற்றைக் கறுத் அயில்விடும்

புட்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல்
புகழ் செட்டி சுப்ரமணியன்

செச்சைப் புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி
தித்திக்கு முத் தமிழினை

தெரியவரு பொதிகைமலை முனிவர்க் குரைத்தவன்
சேவற் திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே
சுப்ரமணியன் சேவற்திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்ட சாபு

ஆலமாய் அவுணருக் அமரருக் அமுதமாய்
ஆதவனின் வெம்மை ஒளிமீது

அரியதவ முனிவருக் இந்துவில் தண்ணென்ற்
அமைந்த் அன்பருக்கு முற்றா

முலமாம் வினை அறுத் அவர்கள் வெம் பகையினை
முடித் இந்திரர்க்கும் எட்டா

முடிவில் ஆனந்த நல்கும் பதம் அளித் எந்த
முதண்டமும் புகழும் வேல்

ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்தும்
இன்பணைகள் உமிழு முத்தும்

இனிவாடை மான் மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவமாருன்

தாலமா மரமுதற் பொருள் படைத் திடும் எயினர்
தரு வனிதை மகிழ்னன் ஐயன்

தனினடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன்
சரவணக் குமரன் வேலே

(முதண்ட மும்புகழும் வேல்
சரவணக் குமரன் வேலே)

---.


மயில் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்டசாபு

ஜோதியிம வேதண்ட கன்னிகையர் தந்த அபி
நய துல்ய சோம வதன

துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசேர்

ஆதினெடு முதண்ட அண்ட பகிரண்டங்கள்
யாவுங்க் கொடுஞ்ஜ சிறகினால்

அணையுன் தனது பேடை அண்டங்கள் என்னவே
அணைக்குங்க் கலப மயிலாம்

நீதிமரை ஓதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்

நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
நிர்வியாகுலன் சங்குவாள்

மாதிகிரி கோதண்ட தண்டன் தரித்த புயன்
மாதவன் முராரி திருமால்

மதுகைட வாரி திரு மருகன் முருகன் குமரன்
வரமுதவு வாகை மயிலே

(முருகன் கலாப மயிலே
வரமுதவு வாகை மயிலே)

---.


சேவல் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்ட சாபு

தான இடும்புசெயு மோகினி இடாகினி
தரித்த வேதாஅள பூதம்

சருவ சூனியமும் அங்கிரியினால் உதறித்
தடிந்து சந்தோட முறவே

கோனாகி மகவானும் வனாள வனாடர்
குலவு சிறை மீள அட்ட

குலகிரிகள் அசுரர் கிளை பொடியாக வெஞ்ஜிறைகள்
கொட்டி எட்டிக் கூவுமாம்

மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவனற் குருபரன்

வானீரம் அவனியழல் காலாய் நவக் கிரகம்
வாழ்னாள் அனைத்தும் அவனாம்

சேனா பதித் தலைவன் வேதாவினை சிறைசெய்
தேவாதி கட் கரசு கட்

டேனான மைக்கடலின் மீனானவற் கினியன்
சேவற் திருத் துவஜமே

(சேவற் திருத் துவஜமே
குருபரன் சேவற் திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 6
சிந்துபைரவி - கண்ட சாபு

பந்தாடலிற் கழங்க் காடலிற் சுடர் ஊசல்
பாடலினொ டாடலின் எலாம்

பழந்தெவ்வர் கட்கம் துணித் இந்திரர்க் அரசு
பாலித்த திறல் புகழ்ந்தே

சந்தாரு நாண்மலர் குழல் அரம்பையர்களும்
சசிமங்கை அனையர்த்தாமுன்

தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்

மந்தாகினித் தரங்க சடிலருக் அரிய
மந்த்ற்ற உபதேச நல்கும்

வரதேசிகன் கிஞ்சுகச் சிகா லங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்

கொந்தார் மலர்க் கடம்பும் செச்சை மாலையும்
குவளையும் செங்க் காந்தளும்

கூதாள மலரும் தொடுத்தணியு மார்பினன்
கோலத் திருக்கை வேலே

(தேசிகன் கோலத் திருக்கை வேலே)

---.


மயில் விருத்தம் - 6
சின்துப்கைரவி - கண்ட சாபு

சங்கார காலமென அரிபிரமர் வெருவுற
சகல லோகமு நடுங்க

சந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும்
சஞ்சலப் பட உமையுடன்

கங்காளர் தனி நாடகம் செய்தபோத் அந்த
காரம் பிறன்டிட நெடும்

ககன கூடமு மேலை முகடு முடிய பசுங்க்
கற்றை கலாப மயிலாம்

சிங்கார குங்கும படீர ம்ருகமத யுகள
சித்ரப் பயோதர கிரி

தெய்வ வாரண வனிதை புனிதன் குமாரன்
திருத்தணி மகீதரன் இருங்க்

கெங்கா தரன் கீதம் ஆகிய சுராலய
க்ருபாகரன் கார்த்திகேயன்

கீர்த்திமா அசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி
கிழிபட நடாவு மயிலே

(பசுங்க் கற்றை கலாப மயிலாம்)

---.


சேவல் விருத்தம் - 6
சின்டுப்கைரவி - கண்ட சாபு

பங்கமாகிய விட புயங்கமா படமது
பறித்து சிவத் அருந்தி

பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள் புரி
பச்சை கலாப மயிலை

துங்கமாய் அன்புற்று வன்புற்ற் அடர்ந்துவரு
துடரும் பிரேத பூத

தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்டப் படக் கொத்துமாம்

மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி
வஞ்ஜி நான்முகி வராகி

மலையரையன் உதவு அமலை திருமுலையில் ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்

செங்க் கணன் மதலையிடம் இங்குளான் என்னு நர
சிங்கமாய் இரணியனுடல்

சிந்த உகிரிற்கொடு பிளந்த மால் மருமகன்
சேவற் திருத் துவஜமே

(மால் மருமகன் சேவற்திருத் துவஜமே)

வேல் விருத்தம் - 7
பீம்பளாச் - கண்ட சாபு

அண்டங்கள் ஒருகோடி ஆயினுங்க் குலகிரி
அனதமாயினு மேவினால்

அடைய உருவிப் புறம் போவதல் லது தங்கல்
அறியாது சூரனுடலை

கண்டம் படப்பொருது காலனுங்க் குலைவுறுங்க்
கடியகொலை புரியும் அது செங்க்

கனகா சலத்தைக் கடைந்து முனை யிட்டு
கடுக்கின்ற துங்க நெடுவேல்

தண்டன் தனுத் திகிரி சங்கு கட்கம் கொண்ட
தானவான் தகன் மாயவன்

தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பற்றலை
தமனியச் சுடிகையின் மேல்

வண்டொன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை
மகையும் பதம் வருடவே

மதுமலர்க் கண்துயில் முகுந்தன் மருகன் குகன்
வாகைத் திருக்கை வேலே

(வாகைத் திருக்கை வேலே
குகன் வாகைத் திருக்கை வேலே)

---.


மயில் விருத்தம் - 7
பீம்பலாச் - கண்ட சாபு

தீரப் பயோததி (க)திக்கும் ஆகாயமும்
ஜகதலமு நின்று சுழல

திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்ஜிகை
தீக் கொப்புளிக்க வெருளும்

பாரப் பணாமுடி அனந்தன் முதல் அரவெலாம்
பதைபதைத்தே நடுங்க

படர்ச்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
பச்சை ப்ரவாள மயிலாம்

ஆர ப்ரதாப புளகித மதன பாடீர
அமிர்த்த கலசக் கொங்கையாள்

ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லி பர
மானந்த வல்லி சிறுவன்

கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார
குருதரு திருத்தணிகை வேள்

கொடிய நிசிசரர் உதரம் எரிபுகுத விபுதர் பதி
குடிபுகுத நடவு மயிலே

(பச்சை ப்ரவாள மயிலாம்
வைய்யளி வருபச்சை ப்ரவாள மயிலாம்)

---.


சேவல் விருத்தம் - 7
பீம்பலாச் - கண்ட சாபு

வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கட் குறும்புகள் தரும்

விடு பேய்களே கழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம் பேய்களைத் துரத்தி

பேறான ஏசரவண பவாஏ என்னு மந்திரம்
பேசி உச்சாடனத்தார்

பிடர் பிடித்துக் கொத்தி நகனுதியினால் உற
பிய்ச்சுக் களித் தாடுமாம்

மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி

வாத பித்தம் சிலேர்ப்பனம் குட்ட முதலான
வல்ல பிணிகளை மாற்றியே

சீறாத ஓராறு திருமுக மலர்ந் அடியர்
சித்தத் இருக்கு முருகன்

சிலைகள் உரு இட அயிலை விடுகுமர குருபரன்
சேவற் திருத் துவஜமே

(செவற் திருத் துவஜமே
குருபரன் சேவற் திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு

மாமுதல் தடிந்து தண் மல்குகிரி யூடு போய்
வலிய தானவர் மார்பிடம்

வழிகண்டு கமல பவனத்தனை சிறையிட்டு
மகவான் தனை சிறைவிடுத்து

ஓமவிருடித் தலைவர் ஆசிபெற்ற் உயர்வானில்
உம்பர் சொற்றுதி பெற்று நா

உடைய கீரன் தனது பாடல் பெற்றுலகு தனில்
ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்

சோம கலச ப்ரபா லங்கார தர ஜடா
சூடி காலாந்த காலர்

துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசஞ்சூல
துரக கேசர மாம்பரச்

சேம வடவாம்புயப் பரண சங்காபரண
திகம்பர த்ரியம்பக மகா

தேவ நந்தன கஜானன சகோதர குகன்
செம்பொற்றிருக்கை வேல்

(ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்)

---.


மயில் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு

செக்கர் அளகேச சிகரத்ன புரி ராசினிரை
சிந்தப் புராரி அமிர்த்தம்

திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
தீவிஷங்க் கொப்புளிப்ப

சக்ரகிரி சூழவரு மண்டலங்கள் சகல
சங்கார கோர நயன

தறுகண் வாசுகி பணா முடி எடுத் உதருமொரு
சண்டப் பரசண்ட மயிலாம்

விக்ரம கிராதகுலி புனமீத் உலாவிய
விருத்தன் திருத்தணிகை வாழ்

வேலாயுதன் பழ வினைத்துயர் அறுத்தெனை
வெளிப்பட உணர்த்தி அருளி

துக்கசுக பேதமற வாழ்வித்த கந்த
சுவாமி வாகனம் ஆனதோர்

துரக கஜ ரதகடக விகடதட நிருதர் குல
துஷடர் நிஷடுர மயிலே

(சண்ட ப்ரசண்ட மயிலாம்)

---.


சேவல் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு

வந்து அர்ப்பரிக்கும் அம்மிண்டுவகை தண்டதரன்
வலிய தூதுவர் பில்லி பேய்

வஞ்ஜினாற் பேதுற மகாபூதம் அஞ்ஜிட
வாயினும் காலினாலும்

பந்தாடியே மிதித்துக் கொட்டி வடவை செம்
பவளமா அதிகாசாமா

பசும் சிறைத்தலமிசைத் தணியயிற் குமரனை
பார்த் அன்புறக் கூவுமாம்

முந்த் ஆகமப் பலகை சங்காகமத்தர் தொழ
முன்பேறு முத்தி முருகன்

முது கானகத் எயினர் பண்டோ ட் அயிற் கணை
முனிந்தே தொடுத்த சிறுவன்

சிந்தா குலத்தை அடர் கந்தா எனப்பரவு
சித்தர்க் கிரங்க் அறுமுகன்

ஜெய வெற்றிவேள் புனிதன் நளினத்தன் முடி குற்றி
சேவற் திருத் துவஜமே

(சேவற் திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 9
துர்கா - கண்ட சாபு

தேடுதற்க் அரிதான நவமணி அழுத்தியிடு
செங்கரனை அமுதம் வாய்கொள்

ஜயமளித் அருள் எனக் என உவப்பொடு வந்து
சேவடி பிடித்த தெனவும்

நீடுமைக் கடல் சுட்டதிற்க் அடைந்த் எழுகடலும்
நீயெமைக் காக்க எனவும்

நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் கா எனவும்
நிகழ்கின்ற துங்க நெடுவேல்

ஆடுமைக் கணபணக் கதிர்முடி புடை எயிற்று
அடலெரிக்- கொடிய உக்ர

அழால் விழிப் படுகொலைக் கடைய கட்செவியினுக்கு
அரசினைத் தனியெடுத்தே

சாடு மைப்புயல் எனப் பசுனிற சிகரியில்
தாய் திமித் துட நடிக்கும்

ஷமரமயில் வாகனன் அமரர்த்தொழு நாயகன்
ஷண்முகன் தங்கை வேலே

(ஷண்முகன் தங்கை வேலே
மயில் வாகனன் தங்கை வேலே)

---.


மயில் விருத்தம் - 9
டுர்கா - கண்ட சாபு

சிகர தமனிய மேருகிரி ரஜதகிரி நீல
கிரி எனவும் ஆயிரமுக

தெய்வனதி காளிந்தி என நீழலிட்டு வெண்
திங்கள் சங்கெனவும் ப்ரபா

நிகர் எனவும் எழுதரிய நேமியென உலகடைய
நின்ற மா முகில் என்னவே

நெடியமுது ககன முகடுற வீசி நிமிருமொரு
நீலக் கலாப மயிலாம்

அகரு மரு மணம் வீசு தணிகை அபிராம வேள்
அடியவர்கள் மிடி அகலவே

அடல் வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
அலங்கற்குழாம் அசையவே

மகரகன கோமள குண்டலம் பல அசைய
வல்லவுணர் மனம் அசைய மால்

வரை அசைய உரகபிலம் அசைய எண்டிசை அசைய
வைய்யளி ஏறு மயிலே

(வையாளீ ஏறு மயிலே
நீலக் கலாப மயிலாம்)

---.


சேவல் விருத்தம் - 9
டுர்கா - கண்ட சாபு

உருவாய் எவர்க்கு நினை அரிதாய் அனைத்துலகும்
உளதாய் உயிர்க் உயிரதாய்

உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட்பொருளதாய்

வரும் ஈசனைக் களப முகன் ஆதரித் திசையை
வலமாய் மதிக்க வருமுன்

வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான் முன்
வைகு மயிலைப் புகழுமாம்

குருமா மணித்திரள் கொழிக்கும் புனற் கடக்
குன்றுதோ றாடல் பழனம்

குலவு பழமுதிர் சோலை ஆவினன் குடி பரங்க்
குன்றிடம் திருவேரகம்

திரையாழி முத்தைத் தரங்கக் கை சிந்தித்
தெறித்திடும் செந்தி நகர் வாழ்

திடமுடைய அடியவர் தொழு பழையவன் குலவுற்ற
சேவற் திருத் துவஜமே

(சேவற் திருத் துவஜமே
பழையவன் சேவற் திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு

வலாரி அலலாகுலம் இலாத் அகலவே கரிய
மாலறியு நாலு மறை ஞூல்

வலான் அலைவிலா நசிவிலான் மலைவிலான் இவர்
மனோலய உலாசம் உறவே

உலாவரு கலோல மகராலய ஜலங்களும்
உலோகனிலை நீர்னிலை இலா

ஒலாவொலி நிசாசரர் உலோகமதெலாம் அழல்உலாவிய நிலாவு கொலைவேல்

சிலாவட கலா வினொதவா சிலிமுகா விலொச
நா சின சிலா தணிவிலா

சிலாமலர் எலா மதிய மோதி மதி சேலொழிய
சேவக சராப முகிலாம்

விலாச கலியாண கலை சேர பசு மேலைமுலை
மேவிய விலாச அகலன்

விலாழி யினிலாழி அகல் வானில் அனல் ஆரவிடு
வேழம் இளைன்யன் கை வேலே

(வேலே, வேழம் இளைன்யன் கை வேலே
வேழம் இளைன்யன் கை வேலே)

---.


மயில் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு

நிராஜத விராஜத வரோதய பராபர
நிராகுல நிராமய பிரா

நிலாதெழு தலால் அறமிலா நெறி யிலா நெறி
நிலாவிய உலாச இதயன்

குராமலி விராவுமிழ் பராரை அமரா நிழல்
குரானிழல் பராவு தணிகை

குலாசல சராசரம் எலாம் இனிதுலாவிய
குலாவிய கலாப மயிலாம்

புராரி குமரா குருபரா எனும் வரோதய
புராதன முராரி மருகன்

புலோமஜை சலாமிடு பலாசன வலாரி புக
லாகும் அயில் ஆயுத நெடுன்

தராதல கிராதர்கள் குலாதவ அபிராம வல
சாதனன் வினோத சமரன்

தடாரி விகடாசுரன் குடாரித படா திகழ்
ஷடானனன் நடாவு மயிலே

(மயிலே, ஷடானனன் நடாவு மயிலே
ஷடானனன் நடாவு மயிலே)

---.


சேவல் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு

மகர ஜலனிதி சுவற உரகபதி முடிபதற
மலைகள் கிடு கிடு கிடெனவே

மகுடகுட வடசிகரி முகடு பட படபடென
மதகரிகள் உயிர் சிதறவே

ககனமுதல் அண்டங்கள் கண்ட துண்டப்பட
கர்ஜித் இரைத் அலறியே

காரையாழின் நகரர் மாரைப் பிளந்து சிற
கைக்கொட்டி நின்றாடுமாம்

சுகவிமலை அமலை பரை இமையவரை தரு குமரி
துடியிடை அனகை அசலையாள்

சுதன் முருகன் மதுரமொழி உழைவனிதை
இபவனிதை துணைவன் எனதிதய நிலையோன்

திகுட திகுட திதிகுட தகுடதி தகுட திகுட
செக்கண செகக் கண என

திருனடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவற் திருத் துவஜமே

(துவஜமே, சேவற் திருத் துவஜமே
சேவற் திருத் துவஜமே)

---.


சேவல் விருத்தம் - 11
மத்யமாவதி - கண்ட சாபு

பூவிலியன் வாசவன் முர்ரரி முனிவோர் அமரர்
பூசனை செய்வோர் மகிழவே

பூதரமும் எழுகடலும் ஆட அமுதூற அனு
போக பதினால் உலகமும்

தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாள வரு
தானதவ ஞூல் தழையவே

தாள் வலியதான பல பேய்கள் அஞ்ஜ சிறகு
கொட்டிக் குரற் பயிலுமாம்

காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழை கமு
காடவிகள் பரவு நடன

காரண மெய்ன்யானபரி சீரணவ் அர அசன
கனகமயில் வாகனன் அடற்

சேவகன் இரஜத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருக முக

சீதள குமார கிருபாகர மனோகரன்
சேவற் திருத் துவஜமே

(துவஜமே சேவற் திருத் துவஜமே
சேவற் திருத் துவஜமே)

---.


மயில் விருத்தம் - 11
மத்யமாவதி

என்னாளும் ஒருசுனையில் இந்த்ர நீலப் போத்
இலங்கிய திருத்தணிகை வாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏரும் ஒரு
நம் பிரானான மயிலை

பனாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
பகர்ந்த அதிமதுர சித்ரப்

பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
மாசறு மயில் விருத்தம் ஒருபத்தும்

படிப்பவர்கள் ஆதி மறை ஞூல்
மன்னான் முகம் பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்

வாணி தழுவப் பெறுவரால்
மகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்

வாரிஜ மடந்தை யுடன் வாழ்
அன்னயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர்

அமுதா சனம் பெறுவர் மேல்
ஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர் பெறுவர்

அழியா வரம் பெறுவரே.

(அழியா வரம் பெறுவரே
அழியா வரம் பெறுவரே)

---.

0 comments:

Post a Comment

 
Free Joomla TemplatesFree Blogger TemplatesFree Website TemplatesFreethemes4all.comFree CSS TemplatesFree Wordpress ThemesFree Wordpress Themes TemplatesFree CSS Templates dreamweaverSEO Design